search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே"

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் பாஜகவுடன் சேரவேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார். #ParliamentElection #BJP #RamdasAthawale #ADMK #AMMK
    புதுச்சேரி:

    மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலே இன்று புதுச்சேரிக்கு வந்தார். தனது துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர்,  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி சேரவேண்டும்.

    தமிழகத்தின் நலனை கருதி அ.ம.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். #ParliamentElection #BJP #RamdasAthawale #ADMK #AMMK
    மகாராஷ்டிராவில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே மீது கன்னத்தில் அறைய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #RamdasAthawale
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரியும், குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே பங்கேற்றார்.

    அப்போது கூட்டத்தில் இருந்த பிரவீன் கோசுவாமி அவரை கன்னத்தில் அறைய முயன்றார். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



    இதையடுத்து, அவரது தொண்டர்கள் அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தனர். இதில் காயமடைந்த அவரை போலீசார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக குடியரசு கட்சியினர் கூறுகையில், ராம்தாஸ் அத்வாலேவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனாலும், உள்ளூர் போலீசார் உரிய பாதுகாப்பை அளிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. #RamdasAthawale
    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு எந்த பாதிப்பும் இ்ல்லை என மத்திய மந்திரி அத்வாலே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #FuelPriceHike #RamdasAthawale
    ஜெய்ப்பூர்:

    நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையிலும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தபாடில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

    இந்நிலையில், மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனென்றால் நான் ஒரு மத்திய மந்திரி, எனக்கு அரசின் சலுகைகள் உள்ளன. அவற்றை நான் பயன்படுத்தி வருவதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி எனக்கு கவலையில்லை. எனது மந்திரி பதவி பறிபோனால்தான் நான் பாதிப்பு அடைவேன் என கூறினார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மத்திய மந்திரியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #FuelPriceHike #RamdasAthawale
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். #Rahulgandhi #RamdasAthawale
    மும்பை:

    கர்நாடகம் மாநில சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றால் பிரதமராக பதவியேற்க தயார் என்றார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி பிரதமராக இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்ற ஆசை குறித்து பேசியுள்ளார். ஆனால், நான் என்ன நினைக்கிறேன் எனில், அவர் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

    கர்நாடக தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி பாஜகவை தலித்களுக்கு எதிரான கட்சி என சித்தரிக்க முயலுகிறது. மக்களுக்கு உண்மை நிலை நன்கு தெரியும் என தெரிவித்துள்ளார். #Rahulgandhi #RamdasAthawale
    ×